வணக்கம்

Tuesday, August 8, 2017

நீட் தேர்வு கேள்வித்தாள் விவகாரம்: உச்சநீமன்றம் அதிரடி உத்தரவு!


SC

புதுதில்லி: பிராந்திய மொழிகளில் 'நீட்' தேர்வு கேள்வித்தாள் அளிக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. ஆனால் அந்த தேர்வு நடத்தப்பட்ட விதம்  மற்றும் அதன் பின்னால் நடைபெற்ற விவகாரங்கள் கடும் சர்ச்சையினை ஏற்படுத்தின.
அதன் காரணமாக தேர்வு முடிவினை வெளியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியயாக தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அந்த வழக்கு இன்று உச்சநீதின்றதில் மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 'நீட்' தேர்வுக்கு பிராந்திய மொழிகளில் கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசு மற்றும் மத்திய பள்ளிக்கல்வி வாரியதிற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேவைப்பட்டால் மருத்துவ கவுன்சிலிங் தேதி நீட்டிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அப்பொழுது தெரிவித்தது 
அத்துடன் 'நீட்' தேர்வினை பிராந்திய மொழிகளில் எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறித்த விபரங்களை  சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரியதால் வழக்கானது ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...