வணக்கம்

Friday, August 11, 2017

நீட் தேர்விலிருந்து 3 ஆண்டுகள் விலக்குக் கோரப்பட்டுள்ளது


senkotian
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகளாவது விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ எட்வர்ட் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:
அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும் உள்ளிட்ட நோக்கங்களைஅடிப்படையாகக் கொண்டு தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை எந்தவித அச்சமும் இல்லாமல் எதிர்கொள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக சுமார் 10,000 ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச இட வசதி இல்லாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் 4 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைவெளியில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யத்தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்பறைகளும் கணினி மயமாக்கப்படும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

No comments:

Post a Comment

விஷன்கல்விச்செய்தி நண்பர்களே..வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை vision19852020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் விஷன்ககல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. விஷன் கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ. விஷன் கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் விஷன் கல்விச்செய்தி

இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 'இக்னோ'...